தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்பகிர்மான நிறுவனங்கள் 5,085 கோடி ரூபாய் பாக்கித் தொகையை செலுத்த தவறியதால் அந்த 13 மாநிலங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பில் தயாரிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் வரை தொகையை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த கால அவகாசம் முடிவடைந்தும் பணம் செலுத்தாத காரணத்தால் 13 மாநிலங்களில் உள்ள 27 மின்பகிர்மான நிறுவனங்கள், மின்சாரம் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு முதல்முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையால் 13 மாநிலங்களில் மின் தடை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…