காசியில் இன்று தொடங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற வேட்டி, சட்டை மற்றும் தோளில் துண்டுடன் வந்து அனைவரையும் கவர்ந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியில் தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பன்னெடுங்கால கலாச்சார தொடர்பை மீட்டெடுக்கும் வகையில் ஒரு மாத கால காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் உத்தரபிரதேச அரசுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் டிசம்பர் 19 ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று நடந்த தொடக்க விழாவில் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சட்டையுடன் பங்கேற்ற பிரதமர் மோடி, காசிக்கும் தமிழர்களுக்குமான உறவை விலாவாரியாகக் கூறி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எம்பி இளையராஜா, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…