Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புஷ்பவனம் பெண் கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது..!

Baskarans Updated:
புஷ்பவனம் பெண் கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது..!Representative Image.

நாகை: புஷ்பவனம் பெண் கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த புஷ்பவனம் கடற்கரையில் படுகாயங்களுடன் கிடந்த பெண் சடலத்தை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்த பெண் தேத்தாகுடி தெற்கு ஊராட்சி சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி துர்கா தேவி என தெரியவந்தது.

இந்நிலையில் கொலை தொடர்பாக அந்தப் பெண்ணின் செல்போன் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் அந்த நேரத்தில் பதிவான காட்சிகள் என புலனாய்வில் இறங்கினர். இந்த ஆய்வில் குற்றவாளி புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேலு மகன் அருண் என்பதும், சேலம் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மயக்கவியல் துறை பயின்று வருவதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், வாட்ஸ் அப் மூலம் பழக்கமான துர்கா தேவி உடன் பல நாட்கள் தனிமையில் இருந்ததாகவும், சம்பவத்தன்று  இறந்து போன துர்கா தேவி ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும், தான் இல்லை என்று கூறியதால் தங்களுக்குள் உள்ள நெருக்கத்தை வெளியில் சொல்லி விடுவதாக துர்கா தேவி மிரட்டியதால் காரில் இருந்து வெளியே தள்ளி காரை அவர் மேலே ஏற்றி கொலை செய்து கடற்கரை ஓரத்தில் இழுத்துச் சென்று போட்டுவிட்டு அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டி சென்றதாகவும் ஒப்பு கொண்டார்.

அதன் அடிப்படையில் அருணை கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய சொகுசு காரையும், வேதாரணியம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.இது குறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் ஆய்வு செய்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்