Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Education : பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு..?

Muthu Kumar June 04, 2022 & 16:44 [IST]
Education : பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு..?Representative Image.

Education : தமிழகத்தில் 2022ம் ஆண்டு நடைபெற்ற 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 6.70 லட்சம்  மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. மேலும், 10-ம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தெரிவித்தார்..

இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கும் விதமாக மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

அந்த அறிக்கையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் அம்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளனர். அதெபோல் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்