Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ரவுடி...விசாரணையில் வெளியான...திடுக்கிடும் உண்மைகள்!

Priyanka Hochumin October 13, 2022 & 11:15 [IST]
தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ரவுடி...விசாரணையில் வெளியான...திடுக்கிடும் உண்மைகள்!Representative Image.

ராமநாதபுரத்தில் ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் அரங்கேறிய அதிர்ச்சி தகவல். இதோ குற்றமும் பின்னணியும்.

ராமநாதபுறம் மாவட்டம் திருவாடானை அருகே செங்கமடை செல்லும் பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி பிரபல ரவுடி முத்துப்பாண்டி தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து முத்துப்பாண்டியின் தாய் பஞ்சம்மாள் அளித்த புகாரின் பெயரில் திருவாடானை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சமத்துவபுரத்தைச் சேர்ந்த நெப்போலியன் மற்றும் அவரின் சகிதரர் மஹாலிங்கம் இருவரையும் சந்தேகத்தின் பெயரில் விசாரித்தனர். அப்போது 15 மற்றும் 17 வயதே ஆன இவர்களுடன் மொத்தம் 4 பேரை போலீஸ் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் வெளிவந்த உண்மைகள். முத்துபாண்டியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

ரவுடி முத்துப்பாண்டியின் மனைவியுடன் மஹாலிங்கம் தகாத உறவு வைத்துள்ளார். இதனை தெரிந்து கடும் கோபமடைந்த முத்துப்பாண்டி நெப்போலியனை மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட்டது. பின்பு தன்னுடைய மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, மகாலிங்கம் வீட்டிற்கு சென்று அவரை வெட்ட முயற்சித்துள்ளார். தன்னுடைய அண்ணனை காப்பாற்ற வந்த நெப்போலியனின் காதில் அறிவால் வெட்டப்பட்டதால், முத்துப்பாண்டி சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வந்துள்ளார். மேலும் கள்ளச்சந்தையில் மது விற்பனைக்கு இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுவதால், முத்துபாண்டியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் மஹாலிங்கம்.

எனவே, சம்பவம் நடைபெற்ற அன்று முத்துபாண்டியின் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். பின்பு முத்துபாண்டியின் காதுகளை அறுத்து, தலையை துண்டாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி விட்டதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். பழிக்கு பழி வாங்க நினைத்து இப்படி கொடூரமாக கொலை செய்த சம்பவம் திருவாடானை பகுத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்