ரஷ்ய அதிபர் புதினுக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், அண்மையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள நகரமான கெர்சனில் இருந்து பின்வாங்கியது.
இது தொடர்பான அறிவிப்பை கடந்த 9 ஆம் தேதி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உக்ரைனுக்கு எதிரான போரில் தலைமை வகிக்கும் ராணுவத் தளபதி ஆகியோர் ராணுவக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கூட்டாக அறிவித்தனர்.
ஆனால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது அங்கு அதிபர் புதினை காணவில்லை. அப்போது அவர் மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் தான் அங்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…