தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையிலிருந்து சேலம் வரை எட்டு வழி சாலை அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்க்கு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.
மேலும், பல விவசாயிகள் போராட்டங்கள் நடத்தினர். இதன் காரணமாக இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எட்டு வழி சாலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்க்கு திமுக உள்பட எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது.
இதனையடுத்து, தமிழக அரசின் கருத்தை கேட்ட பின்பே சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்ட பணிகள் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்குமா இல்லை எதிர்க்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…