Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பள்ளி வகுப்பறையில் பூட்டி வைக்கப்பட்ட மாணவன்.! பதை பதைக்கும் நிமிடங்கள்!

Gowthami Subramani Updated:
பள்ளி வகுப்பறையில் பூட்டி வைக்கப்பட்ட மாணவன்.! பதை பதைக்கும் நிமிடங்கள்!Representative Image.

பள்ளி மாணவர் ஒருவரை வகுப்பறையில் வைத்துப் பூட்டி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவர் வகுப்பறையிலேயே தூங்கியுள்ளார். இதனைப் பார்க்காமல், மாணவனை வகுப்பறையிலேயே வைத்து பள்ளி அலுவலர்கள் அறையைப் பூட்டிச் சென்றுள்ளனர்.

பள்ளி வகுப்பறையில் பூட்டி வைக்கப்பட்ட மாணவன்.! பதை பதைக்கும் நிமிடங்கள்!Representative Image

இதனிடையே, மாணவன் காணாமல் போனதாகப் பெற்றோர்கள் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர். தொடர்ந்து பள்ளியில் தேடிப் பார்த்த போது மாணவனின் அலறல் சத்தம் வகுப்பறையில் இருந்து கேட்டுள்ளது.  

இதனைத் தொடர்ந்து, மாணவனின் பெற்றோர் மற்றும் போலீசார் பூட்டை உடைத்து மாணவனை மீட்டனர். கவனக் குறைவாக, மாணவனை வகுப்பறையில் வைத்துப் பூட்டிச் சென்றது குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்