சென்னையை அடுத்த நன்மங்கலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்ற நபருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் சில மாதங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த அவர் பின்னர் தனது சுய ரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார்.
திருமணத்திற்கு யாரையேனும் காதலித்தாயா என கேட்டுள்ளார், அதற்கு மனைவி எதையும் மறைக்காமல் ஆமாம் காதலித்தேன் ஆனால் அதன் பின்னர் விட்டுவிட்டேன் என கூறியுள்ளார். ஆனால் பிரவீன்குமார் அமணைவியை முன்னாள் காதலை கூறி அவ்வப்போது காயப்படுத்தி வந்துள்ளார். பின்னர், தனது மனைவியின் செல்போனில் அவர் படிக்கும்போது பழகியதாக கூறிய நண்பருடன் எடுத்துக்கொண்ட அழிக்கப்பட்ட புகைப்படங்களை சாப்ட்வேர் தொழில்நுட்பத்துடன் பிரவீன்குமார் மீண்டும் பதிவிறக்கம் செய்துள்ளார்.
அதனை அவரது மனைவியிடம் காட்டியுள்ளார், அதனை பார்த்த அவர் அதிர்ந்து போயுள்ளார், மேலும் தனது மனைவி குளித்ததை மறைந்து நின்று வீடியோ எடுத்துள்ளார், அவரும் அவரது மனைவியும் உடலுறவில் ஈடுபடத்தையும் விடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு இந்த வீடியோக்களை வெளிவிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூபாய் 30 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இது குறித்து தனது பெற்றோருடன் கூறி கதறி அழுதுள்ளார் இளம்பெண், அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எதுவும் நடக்க வில்லை, எனவே போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் படிக்கும் போது அந்த பெண் காதலித்த நபரும் பிரவீன்குமாரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், திட்டமிட்டே இதைச் செய்ததும் தெரியவந்தது.
இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜூடம் அந்த இளம்பெண் புகார் அளித்துள்ளார். கணவனே மனைவியின் ஆபாச வீடியோக்களை காட்டி பணம் கேட்டு மிரட்டி சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…