Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தலித் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. உ.பி.யில் பரபரப்பு!!

Sekar August 01, 2022 & 15:31 [IST]
தலித் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. உ.பி.யில் பரபரப்பு!!Representative Image.

உத்தரபிரதேசத்தில் 30 வயதான தலித் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, துப்பாக்கி முனையில் துணிகளை கழற்றுமாறு வற்புறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, புல் வெட்டுவதற்காக வயலுக்குச் சென்ற அவர், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், துப்பாக்கி முனையில் தனது ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தி வீடியோவும் எடுத்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தின் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் வீடியோவை குற்றம் சாட்டப்பட்டவர் சமூக ஊடகங்களில் பரப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் அனுஜ், குல்தீப், அங்கித், ரவி, ரிஸ்வான், சோட்டா மற்றும் அப்துல் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்