உத்தரபிரதேசத்தில் 30 வயதான தலித் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, துப்பாக்கி முனையில் துணிகளை கழற்றுமாறு வற்புறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, புல் வெட்டுவதற்காக வயலுக்குச் சென்ற அவர், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், துப்பாக்கி முனையில் தனது ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தி வீடியோவும் எடுத்ததாக கூறியிருந்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தின் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் வீடியோவை குற்றம் சாட்டப்பட்டவர் சமூக ஊடகங்களில் பரப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் அனுஜ், குல்தீப், அங்கித், ரவி, ரிஸ்வான், சோட்டா மற்றும் அப்துல் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…