சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக எழுந்த புகாரில் பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலை ஆராய்ச்சி மாணவிக்கு அதே பல்கலைக் கழகத்தின் பொறுப்பு பதிவாளர் கோபி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இது குறித்து ஆராய்ச்சி மாணவி பாலியல் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பொறுப்பு பதிவாளர் கோபி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வில் ஜாதி குறித்த கேள்வி கேட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், மாணவியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பல்கலைக்கழக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…