புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் உட்பட இருவர் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் முருகேசன் (38 வயது) என்பவர் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுடன் சேர்ந்து 17 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் சிறுமிக்கே தெரியாமல் அவருக்கு மதுவை ஊத்திக் கொடுத்து பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியுள்ளனர். சம்பவம் வெளியே தெரியவர இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பின்னர் இருவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்த நிலையில், போலீசார் முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மற்றொரு குற்றவாளி 16 வயது சிறுவன் என்பதால் அவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.
சிறுவனும் கிராம உதவியாளரும் சேர்ந்து சிறுமிக்கு மதுவை ஊத்திக் கொடுத்து சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு மக்கள் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…