Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி - லாரி டிரைவர் பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார்..!

Saraswathi Updated:
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி - லாரி டிரைவர் பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார்..!Representative Image.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பாலியல் தொல்லை கொடுக்கும் லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி  கிராமத்தை சேர்ந்தவர் சந்தன ராணி (வயது64).  வீட்டின் அருகே உள்ள லாரி டிரைவர் கனகராஜ் என்பவர் மூதாட்டி சந்தனராணிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மூதாட்டி சந்தன ராணி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது,  கையில் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி, புகார் மீது  மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என மூதாட்டிக்கு உறுதிளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் மீது  உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தற்கொலை செய்துகொள்வேன் என்று மூதாட்டி அப்போது எச்சரிக்கை விடுத்தார். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிவயது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்