தூத்துக்குடியில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த மகனை, கள்ளக்காதலனை ஏவி ஓடஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு கணேஷ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், சுப்புலட்சுமிக்கு தூத்துக்குடி டி.எம்.பி காலனியை சேர்ந்த அவரது உறவினரான சுடலைமணி என்பவர் உடன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, கள்ள காதலாக மாறியுள்ளது. இதை ஆவுடையப்பன் கண்டித்ததால், சுப்புலட்சுமி குடும்பத்தினரை விட்டுப்பிரிந்து, கள்ளக்காதலன் சுடலை மணியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
இதனால், ஆத்திரமடைந்த ஆவுடையப்பனின் மகனான கணேஷ், சுடலைமணியின் வீட்டிற்கு சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது தாயின் கள்ளக்காதலை கண்டித்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று இரவு சுடலைமணி துணையுடன் தாய் சுப்புலட்சுமி, டி.எம்.பி காலனிபகுதியில் பைக்கில் சென்ற மகன் கணேசை ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
தகவலறிந்து வந்த ஆவுடையப்பனின் உறவினர்கள், பலியான கணேசனின் உடலை வாங்க மறுத்து, கொலைக்கு காரணமான தாய் சுப்புலட்சுமி, அவரின் கள்ளக்காதலன் சுடலை மணி உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தென்பாதம் காவல் நிலையத்தில் கடந்த 50 நாட்களுக்கு முன்பு சுடலைமணி மற்றொரு உறவினரான முருகன் என்பவர் மீது பொய் வழக்கு அளித்தால், முருகன் காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலைச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…