Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திகில்.. பாலித்தீன் கவரில் சடலம்.. சென்னையை நடுங்க வைத்த கொலை!!

Sekar September 03, 2022 & 14:33 [IST]
திகில்.. பாலித்தீன் கவரில் சடலம்.. சென்னையை நடுங்க வைத்த கொலை!!Representative Image.

சென்னையில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கால்வாயில் பிளாஸ்டிக் கவரில் சடலம் ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

துப்புரவு பணியாளர்கள் சென்னை சின்மயா நகர் நெற்குன்றம் சாலையில் உள்ள கால்வாயில் கருப்பு கலர் பிளாஸ்டிக் பாலித்தீன் கவரில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், பாலித்தீன் கவரை பிரித்தபோது உள்ளே நைலான் கயிறால் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலமொன்று உடல் முழுவதும் ரத்தக் கறையோடு இருந்தது.

இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த 67 வயதான பாஸ்கரன் என்று தெரிய வந்தது.

இவர் வைப்ரேஷன் இன்ஜினியரிங் கன்சல்டிங் சர்வீஸ் கம்பெனியின் உரிமையாளர் எனவும் தெரியவந்தது. இந்த நிறுவனமானது கட்டிடத்தை உறுதித் தன்மையோடு கட்டித் தருவதற்கு பிளான் போட்டுக்கொடுக்கும் கட்டுமான நிறுவனமாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்