Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பகீர்.. அரை நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!!

Sekar September 02, 2022 & 16:43 [IST]
பகீர்.. அரை நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!!Representative Image.

குருகிராமில் உள்ள நாதுபூர் பகுதியில் பெண் ஒருவரின் அரை நிர்வாண உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. நாதுபூர் பகுதியில் உள்ள காலி இடத்தில் அரை நிர்வாண உடல் கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

குருகிராம் போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகே என்ன நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

ஊடகங்களிடம் பேசிய காவல்துறை ஏசிபி விகாஸ் கௌஷிக், "முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அவர் உடல் அரை நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். 

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனினும் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைக்கு பிறகே எதையும் உறுதி செய்ய முடியும்." என்றார்.

பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண டெல்லி-என்சிஆரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் இறந்தவரின் புகைப்படங்களையும் போலீசார் அனுப்பியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்