மதுபோதையில் தகராறு செய்த போலீஸ்கரரை எச்சரித்து அனுப்பிய எஸ்.ஐ.ஐ தாக்கி மண்டையை உடைத்த போலீஸ்காரரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழப்பூவந்தியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. 32 வயதான இவர் அருகிலுள்ள இளையான்குடி போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் பூவந்தியில் உள்ள சலூன் கடைக்காரர் ஒருவரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து சலூன்கடைக்காரர் பூவந்தி எஸ்.ஐ. பரமசிவத்திடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். பரமசிவம் காவலர் முத்துப்பாண்டிய எச்சரித்து அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்திட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை பூவந்தி சோதனைச் சாவடியில் எஸ்.ஐ.பரமசிவம் பணியில் இருந்தபோது அங்கு வந்த முத்துப்பாண்டி பரமசிவத்திடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கியுள்ளார். அப்போது நானும் போலீஸ்காரன் தான், என்மீது ஏற்கனவே இரண்டு வழக்கு உள்ளது, என்னையவே கண்டிக்கிறாயா என தென்னாவெட்டாக பேசியுள்ளார்.
இதற்கிடையே, முத்துப்பாண்டி கல்லால் தாக்கியதில் எஸ்.ஐ.பரமசிவம் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால், அவர் அருகிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து முத்துப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்த பூவந்தி போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…