கேரளா கொல்லத்தை அடுத்த அட்டிங்களை சேர்ந்த பெண்ணுக்கும் சடையமங்களத்தை சேர்ந்த ஆணுக்கும் 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பின்னர் கணவரும், மாமியாரும் மாந்திரீகம் என்ற பெயரில் தன்னை சித்ரவதை செய்ததாக அந்த பெண் புகாரளித்துள்ளார். கணவருக்கும், மாமியாருக்கும் உடல் நலம் சரியாக வேண்டும் என்பதற்காக தன்னை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியும், அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த பெண் அவர்கள் மீது குற்றம் சாட்டி உள்ளார். மேலும் மாந்திரீகம் செய்ய வந்தவர்கள் தன்னிடம் தவறாக நடத்துள்ளதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். கேரளாவில் சமீபத்தில் நடந்த நரபலி சம்பவத்தை கேட்டு, தனக்கு நேர்ந்த கொடுமைகளை அந்த பெண் தெயிரியமாக காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…