கந்தர்வக்கோட்டை அருகே வடுக்கப்பட்டியை சேர்ந்தவர் சரண்யா. இவருக்கு ரவிச்சந்திரன் என்பவருடன் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். ரவிச்சந்திரன் ஒரு ராணுவ வீரர், அவர் ஒய்வு பெற்று தற்போது வங்கியில் காவலாளியாக பணிபுரிகிறார். கடந்த 8 மாதங்களாகவே சரண்யாவிற்கும், ரவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவித்துக் கொண்டு சரண்யா தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டார்.
இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதில் ரவிச்சந்திரன் திருமணமாகாத தன்னுடைய இரண்டாவது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் இந்திய சட்டப்படி தாய் தந்தை விவாகரத்து ஆகும் போது, பிள்ளைகள் தாயுடன் இருக்க வேண்டும் என்று தான் கூறுகிறது. இதன் அடிப்படையில் நீதிமன்றம் சரண்யாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. வழக்கில் தோற்று விட்டோம் என்ற கோபத்தில் இருந்த ரவிச்சந்திரன் வடுகபட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மாமனார் சைவராஜை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரவிசந்திரனை கைது செய்து, அவரிடம் இருக்கும் துப்பாக்கியை கைப் பற்றி விசாரணையை தொடங்கினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…