டெல்லி ஹரியானாவில், சூட்கேஸிலிருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, டெல்லியில் ஷ்ரத்தா என்பவரை கொலை செய்து உடலைக் கூறு கூறாகப் பிரித்து, தினமும் இரவு நேரத்தில் அந்த உடல் பாகங்களை நாய்க்கு தூக்கிப் போட்ட சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில் போலீசார் இதனைத் தீவிரமாக விசாரித்து வந்த சமயத்தில் வியாழன் அன்று பிற்பகலில் ஹரியானாவில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் சூட்கேஸில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 27 வயது பெண்ணான கொலை செய்யப்பட்ட ஷ்ரதா வால்கர் என்று போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.
சூரஜ்குண்ட் வனப்பகுதியில், மீட்கப்பட்ட உடல் உறுப்புகளை கொண்ட சூட்கேஸுடன் ஃபரிதாபாத் போலீசார் டெல்லி போலீசாரை தொடர்பு கொண்டுள்ளனர்.
இதில் வெளியான தகவலின் படி, மனித எச்சங்கள் இருந்த பிளாஸ்டிக் பை மற்றும் ஒரு சாக்கால் சுற்றப்பட்டிருந்தது. மேலும், இதனருகில் ஆடைகள் மற்றும் பெல்ட் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது. இது ஷ்ரத்தா வாக்கர் உடல் உறுப்புகளா என்பதைப் போலீசார் சந்தேகித்து அதனை பிரேத மரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…