Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sri Lanka Issue : இலங்கை எம்.பி அடித்து கொலை..? என்ன நடந்தது..?

Muthu Kumar May 14, 2022 & 15:31 [IST]
Sri Lanka Issue : இலங்கை எம்.பி அடித்து கொலை..? என்ன நடந்தது..?Representative Image.

Sri Lanka Issue : இலங்கையில் போராட்டம் வெடித்த நிலையில் அமரக்கீர்த்தியை தாக்கினர். இதனால் அச்சமடந்த எம்.பி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியானது.

பொருளாதர நெருக்கடி 

இலங்கையில் வரலாறு காணத பொருளாதர நெருக்கடி நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஏடுபட்டு வருகின்றனர்.

தீக்கு இரையான ராஜபக்சே வீடு

இந்த போராட்டம் வெடித்ததில் கடந்த 3ம் தேதியன்று கொழும்புவில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவரது வீட்டிற்க்கு தீ வைத்து கொலுத்தினர். அப்போது ராஜபக்சேவின் ஆதரவாளர்களும் அங்கு திரண்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் வெடித்தது.

எம்.பி பலி
 
இந்த வன்முறையின்போது ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா உயிரிழந்துள்ளார். அவரது பாதுகாவலரும் சடலமாக மீட்கப்பட்டார்.

எம்பி தற்கொலை 

போராட்டத்தின் போது காரை மறித்த போராட்டக்காரர்களை அமரகீர்த்தி துப்பாக்கியால் சுட்டதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அவரை தாக்கியுள்ளனர். இதனால் அச்சமடைந்த எம்பி, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

புதிய திருப்பம்

இந்நிலையில் இறந்த எம்பி அமரக்கீர்த்தியின் பிரதே பரிசோதனை வெளியாகியுள்ளது. அதில் அவர் துப்பாக்கியால் சுட்டு இறக்கவில்லை, போராட்டக்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டதில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்