திருப்பத்தூரில் தெரு நாய்கள் கடித்து சிறுமி உட்பட எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிந்து வருகிறது.
இந்த நிலையில் தெரு நாய்களை பிடிக்க அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் நகராட்சி சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று கோட்டை தெரு ஜின்னா ரோடு பகுதியை சேர்ந்த ஆரிப் மகள் கௌசர் ஃபாத்திமா என்ற 8 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கு சுற்றித்திரிந்த நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார்.
அ தன் பின்னர் பெற்றோர்கள் அவரை மீட்டு முதல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் அதேபோல் இன்று மட்டும் அப்பகுதியில் சுமார் 8 நபர்களை தெரு நாய்கள் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…