மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக இருந்துவந்த போலீஸ் எஸ்.ஐ தன்னுடன் பணியாற்றும் பெண் போலீசை 7 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மகராஜ்புரா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் தர்மேந்திர சிங், இந்நிலையில் இவர் மீது குவாலியர் அஜாக் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் பாலியல் புகார் கொடுத்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக கூறி 7 ஆண்டுகளாக தண்ணி பாலியல் வன்கொடுமை செய்தார் என அந்த புகாரில் கூறியுள்ளார், தற்போது இந்த புகார் குவாலியர் காவல்துறை எஸ்.பி யின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு போபாலில் நடந்த போலீஸ் அணிவகுப்பின் போது சப்-இன்ஸ்பெக்டர் தர்மேந்திர சிங்குக்கும் பழக்கம் ஏற்பட்டது, பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தோம், மேலும் தன்னை திருமணம் செய்துகொள்வதாக அவர் வாக்குறுதி அளித்தார், ஆனால் அதனை செய்யாமல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவந்தார் என கூறியுள்ளார், இதனை அடுத்து திருமணம் செய்துகொள்ளும்படி கூறிய நிலையில் அவர் முடியாது என கூறிவிட்டார். இவரை நம்பினால் சரிப்பட்டு வரத்து என நினைத்து நான் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டேன் என கூறியுள்ளார்.
மேலும் எனக்கும் அவருக்கும் இடையே இருந்த அந்தரங்க உறவு குறித்து அவர் எனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் எனது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என அந்தப் பெண் கான்ஸ்டபிள் புகாரில் கூறியுள்ளார். தற்போது இந்த புகார் தாதியா எஸ்.பிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் குவாலியர் சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…