மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகர் அருகே சுகா கிராமத்தில் பெண் தெய்வத்திற்கான கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு மர்ம நபர் ஒருவர் அரை நிர்வாணமாக முகமூடி அணிந்துகொண்டு நுழைந்துள்ளார். அப்போது கோவில் உள்ளே நுழைந்த உடன் அங்கு நின்றுகொண்டிருந்த சாமி சிலையை பார்த்த அவர் கையெடுத்து கும்பிட்டுவிட்டு அங்குள்ள உண்டியலை நைசாக நகர்த்திக்கொண்டு சென்றுள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் கோவில் உள்ளே இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், கோவிலின் இரு பெரிய மணிகள் மற்றும் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்த பொருட்கள் உள்ளிட்டவற்றையும் அந்த நபர் திருடி சென்று விட்டாராக என தெரிவித்துள்ளனர்.
இந்த விடியோவை பார்த்த பலர் பலவாறு கமெண்டுகளை அல்லி வீசி வருகின்றனர். அதில் சிலர் கடவுளின் கருவறையில் சென்று இது திருட்டு ஆகாது எனவும் கடவுளிடம் நேரடியாக சென்று இதனை பெற்றுள்ளார் எனவும், சிலர் அந்த திருடர் ஒரே நேரத்தில் தனது இறை நம்பிக்கையை உயிரோட்டத்துடன் வைத்து கொண்டதுடன், தனது தொழிலையும் செய்து இரட்டை பலன்களை பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…