தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29 ஆம் நாள் முதல் வட கிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனால், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து கொட்டித் தீர்த்தது.
இதனால், ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல் தேங்கியது. இதில் வட கிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே சென்னையில் பல்வேறு இடங்களில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது. இருப்பினும், புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.
அதிலும், காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதால் அதிகபட்சமாக சீர்காழியில் கனமழை பெய்ததில், அந்தப் பகுதி முழுவதுமே கடல் போல காட்சி அளித்தது. இதுவரை அதாவது 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ அளவிற்கு மழை வெளுத்து வாங்கியது. இதனால், குடியிருப்புகள் முழுவதும் வெள்ளக் காடாக மாறிய நிலையில் நிவாரணம் வழங்கப்பட்டது.
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
இந்நிலையில் தமிழகத்தில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் இன்று அதாவது நவம்பர் 16, 2022 அன்று புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால், தமிழகத்துக்கு மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகக் கூடிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் வெள்ளிகிழமை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…