Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தோஷம் இருப்பதாக கூறி.. சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. பூசாரி போக்ஸோ சட்டத்தில் கைது!!

Sekar August 12, 2022 & 16:21 [IST]
தோஷம் இருப்பதாக கூறி.. சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. பூசாரி போக்ஸோ சட்டத்தில் கைது!!Representative Image.

மதுரவாயலில் சிறுமிக்கு தோஷம் இருப்பதாகக் கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பூசாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையை அடுத்த மதுரவாயல் கந்தசாமி நகர் 4வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். 55 வயதான இவர் கோவில் பூசாரியாக உள்ளார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு தோஷம் இருப்பதாகக் கூறி அதற்கு சிறப்பு பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் அந்த பூசையை நள்ளிரவில் தான் செய்ய வேண்டும் எனக் கூறியதோடு, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பெற்றோரின் அனுமதியுடன் சிறுமியை மட்டும் தனது வீட்டிற்கு தனியாக வரவழைத்துள்ளார்.

இந்த சம்பவம் சிறுமியின் நண்பர் ஒருவருக்குத் தெரியவர, பூசாரின் லீலைகள் குறித்து ஏற்கனவே அறிந்துள்ள அவர் பெற்றோரை அலெர்ட் செய்துள்ளார். இதனால் பதறியடித்து, அந்த இரவிலேயே பூசாரியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு சிறுமியிடம் விசாரித்தபோது, பூசாரி தவறாக நடந்துகொண்ட விஷயம் தெரியவந்துள்ளது. இதையடுத்து பெற்றோர் மற்றும் உடன் சென்றவர்கள் பூசாரியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதற்கிடையே காயமடைந்த பூசாரியை மீட்ட அக்கம்பக்கத்தினர், பூசாரியை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து பெற்றோர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூசாரியை மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதோடு, அவரிடம் விசாரணை நடத்தியதில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பூசாரியை கைது செய்தனர். அவர் சிகிச்சை பெற்று வந்ததால், மருத்துவமனையில் அவருக்கு போலீஸ் காவல் போடப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து அவர் தப்பித்து விட்டார். அவரை கடந்த 5 நாட்களாக தீவிரமாக போலீசார் தேடி வந்த நிலையில், பூசாரி தானாகவே மதுரவாயல் அனைத்து மகளில் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். 

இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்