குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஹன்ஸ்புரா சொசைட்டியில் சிறுமியை தெருநாய் கடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தெருநாய் கடித்ததில் சிறுமி பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அந்த நாய் சிறுமியை கடித்து கன்னத்தின் சதையை பிய்த்து எடுத்தது. நாயால் தாக்கப்பட்ட நிலையில், சிறுமி உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிறுமியின் முகத்தில் பல தையல்கள் போடப்பட்டுள்ளது.
நாயிடம் இருந்து சிறுமியின் தாய் காப்பாற்றினார். இதற்கிடையே நாய் கடித்ததால் தாயும் காயமடைந்தார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…