Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நபிகள் நாயகம் குறித்து அவதூறு.. டைலர் படுகொலை.. உச்சகட்ட பரபரப்பு!!

Sekar June 28, 2022 & 18:51 [IST]
நபிகள் நாயகம் குறித்து அவதூறு.. டைலர் படுகொலை.. உச்சகட்ட பரபரப்பு!!Representative Image.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் ஸ்டேட்டஸ் போட்டதற்காக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவரால் கடைக்காரர் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

உதய்பூரில் உள்ள ஒரு கடைக்கு கத்தி மற்றும் வாளுடன் சென்ற சிலர் பட்டப்பகலில் கடைக்காரரை கொடூரமாக கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் உதய்பூரின் பூத் மஹாலின் தன் மண்டி பகுதியில் சுப்ரீம் டெய்லர்ஸ் என்ற பெயரில் தையல் கடை நடத்தி வந்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ரியாத் என்பவர் துணி தைக்க அளவு கொடுப்பதற்காக தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் தையல் கடைக்கு வந்து கடைக்காரரை கொடூரமாக கொன்றதாக தகவல்கள் மேலும் கூறுகின்றன. பலியானவர் கன்ஹையா லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டைலர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது இரு சமூகங்களுக்கு இடையேயான மோதலாக வெடிக்கும் அபாயம் உள்ளதால் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய மாநில முதல்வர் அசோக் கெலாட், "இது மிகவும் வருத்தமான சம்பவம். இது சிறிய சம்பவம் அல்ல, நடந்தது கற்பனைக்கு எட்டாதது. குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது." என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்