தாயை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரத்தில் தொழிலாளியை அடித்து கொன்ற சகோதரர்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஓம்நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 43). கூலி தொழிலாளியன இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன்கள் புவனேஷ்வரன் (28) மற்றும் சதீஷ் (24) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2018 -ம் ஆண்டு மகேந்திரன் எஸ்.கைகாட்டிக்கு பகுதிக்கு சென்ற போது அங்கிருந்த புவனேஷ்வரன் சதீஷ் மற்றும் இவர்களது நண்பரான பிரட்லீ என்ற நாகராஜ் (30) ஆகியோர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது மகேந்திரன் சதீஷ் மற்றும் புவனேஸ்வரனின் தாயை குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் இரும்பு கம்பியால் மகேந்திரனை தாக்கியுள்ளனர் அதில் படுகாயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார் புவனேஷ்வரன், சதீஷ், நாகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழப்பட்டது. அதில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்களான சதீஷ், புவனேஸ்வரன், மற்றும் நாகராஜ் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து மூன்று பேரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…