ஆம்னி பேருந்துகள் இன்று இரவு இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாண்டஸ் புயல் ஆனது இன்று மாமல்லபுரம் கடற்கரையில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையிலிருந்து தமிழக முழுவதும் 800 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும், புயல் எச்சரிக்கை காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் மட்டும் பயணிக்கும் பேருந்துகள் இன்று இரவு வேறு சாலையை தேர்ந்தெடுத்து பயணிக்க அறிவுறுத்தி உள்ளோம் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை மாநகராட்சி பேருந்துகள் புயல் எச்சரிக்கை காரணமாக இயக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…