புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் நிரவி நடுகளம் பேட் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் திலீப் குமார் (21). இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவரவே அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை போலீஸ் தேடுவதாக அறிந்த திலீப்குமார் ஓடி ஒளிந்து கொண்டார். தலைமறைவான திலீப்குமாரை வலை வீசி தேடி வந்தனர். போலீசாருக்கு பயந்து போய், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். பின்னர் திலிப்குமாரை மீட்ட போலீசார் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் திலீப்குமாரின் செல்போனை வாங்கி அதை ஆய்வு செய்தபோது அதில் அந்த பெண் குளிக்கும் வீடியோ இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேற்கொண்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது குறித்து புதுச்சேரி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…