தூத்துக்குடி நடுக்கடலில் சங்கு குளிக்கும் போது மூச்சுத் திணறி மீனவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜா. நேற்று காலை தனது படகில் 10 பேருடன் சங்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் நடுக்கடலில் சங்கு குளிக்கும் போது மைக்கேல் ராஜாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சக மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மைக்கேல் ராஜாவை படகு மூலம் கறைக்கிக் கொண்டு வந்து உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சோதனை செய்த மருத்துவர்கள், மைக்கேல் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து மைக்கேல் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. மைக்கேல் ராஜா பலியான சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…