Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளக்காதலால் விபரீதம்.. பண்ருட்டியில் நடந்த படுகொலை!!

Sekar September 10, 2022 & 13:11 [IST]
கள்ளக்காதலால் விபரீதம்.. பண்ருட்டியில் நடந்த படுகொலை!!Representative Image.

கடலூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தட்டாஞ்சாவடி காந்திநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் உள்ள சுடுகாட்டு பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். 

அப்போது, மதுபோதையில் கள்ளக்காதல் விவகாரம் ஒன்றில் நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இந்த வாக்குவாதம் முற்றி, நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஆட்டோ டிரைவர் சக்திவேலை கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சக்திவேலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சக்திவேலின் நண்பர்கள் சுமன் மற்றும் அவரது நண்பரை பிடித்து  விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில், சக்திவேலுக்கும் அவரது நண்பன் சுமனுக்கும் இடையே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்கனவே தகராறு இருந்து வந்ததும், அதுவே மதுபோதையில் கொலையில் முடிந்துள்ளதும் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, சக்திவேல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்யக்கோரி சக்திவேலின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். எனினும் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் களைந்து சென்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்