பஞ்சாம் மாநிலம் லூதியானாவை சேர்ந்த ரூபிந்தர் கவுர் என்ற பெண், கணவரை பிரிந்து சுடானி கலான் கிராமத்தில் தனது தாய் வீட்டில் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த பெண்ணின் மூன்றாவது மகன் ஹர்மன் நள்ளிரவில் விடாமல் அழுந்துக் கொண்டிருப்பதால் ஆத்திரத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற ரூபிந்தர், தான் பெற்ற பிள்ளை என்றும் பாராமல் அச்சிறுவன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார்.
இதனால், குழந்தை அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பத்தினரும் ரூபிந்தரரின் தாயும் குழந்தையின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, சண்டிகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். குழந்தை பரிசோதித்த மருத்துவர்கள் 50% -திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தகுந்த சிகிச்சைக்கு பின் குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீஸார் ரூபிந்தரை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி மறும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், விசாரணையில் கணவருடனான திருமண தகராறு காரணமாக அந்தப் பெண் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…