இங்கிலாந்தில் கடும் வறட்சி நிலவுவதால், பல்பொருள் அங்காடிகளில் குடிநீர் பாட்டில் விற்பனைக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், வாடிக்கையாளர்களை 3 முதல் 5 குடிநீர் பாட்டிகள் மட்டும் வாங்கும்படி அந்த அங்காடிகள் கேட்டுக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், கடுமையான வெப்பம் காரணமாக ஆப்பிள், உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் தண்ணீர் பற்றாக்குறையால் கட்டிடங்கள், ஜன்னல்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ய இங்கிலாந்து அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஒருபுறம் வெள்ளத்தில் தள்ளத்துக் கொண்டிருந்தாலும், மறுபுறும் வறட்சி மக்களை போட்டு வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உயிரைக் காக்கும் தண்ணீருக்கே கட்டுபாடா? உண்மையில் வறுத்தமளிக்கும் விஷயம் தான். தண்ணீரை சேமிப்போம்!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…