சென்னையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக இணையதளம் வழியாக ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து கொண்டே சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விபச்சார தொழிலை நடத்தி வந்த ஜோதி ரஞ்சன் ஜெனா என்கிற ராகுலை புவனேஸ்வர் சென்று தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது நண்பர் கிருஷ்ணா சந்திரா ஸ்வனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜோதி ரஞ்சன் மீது சென்னை முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் சோசியல் மீடியா மூலம் விபச்சாரி நடத்தி வருவதால் போலீசாரால் இவரை பிடிக்க முடியாமல் இருந்துவந்தது. கடந்த 10 ஆண்டுகளாக போலீசார் இவரை தேடிவந்தனர்.
இவர் பிரபல லோகாண்டோ என்ற டேட்டிங் இணையதளம் மூலம் விபச்சாரம் செய்துவந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அந்த இணையதளம் மூலம் தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு தங்களது வாட்சப் எண்ணை கொடுத்து அதில் அவர்களுக்கு பெண்களின் ஆபாச புகைப்படங்களை அனுப்பி அதில் யாரையேனும் தேர்ந்தெடுக்க செய்துள்ளனர். பின்னர் சென்னையில் உள்ள கிண்டி, நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் உள்ள அபார்ட்மெண்ட்கள், ஹோட்டல்களில் ரூம் புக் செய்து இந்த தொழிலை நடத்திவந்துள்ளனர்.
இதற்கு சென்னையில் உள்ள பிராளமான ஹோட்டல்களைமட்டும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த விபச்சார தொழிலுக்கு கல்லூரி மாணவிகள், குடும்ப தலைவிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோரை முபையில் இருந்து விமான டிக்கெட் புக் செய்து சென்னை அழைத்துவந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி ஆண்டுக்கு 5 முதல் 6 கோடி வரை சம்பாதித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்தியா முழுவது உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி செல்போன் எண்களை பயன்படுத்திவந்துள்ளனர். 8 செல்போன்களை பயன்படுத்தி 50க்கும் மேற்பட்ட வாட்சப் குறிப்புகளில் இந்த தொழிலை செய்துவந்துள்ளார்.
தற்போது ஒடிசாவில் தங்கியிருந்த ஜோதி ரஞ்சன் ஜெனா என்கிற ராகுலை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…