டெல்லி தெற்கு எக்ஸ்டன்ஷன் பார்ட் - 1 பகுதியில் 'கோட்' என்ற தனியார் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு 18 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு ஒரு பெண் தனது நண்பர்களுடன் சென்றுள்ளனர். அப்போது, விடுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் அவர்களை விடுதிக்குள் நுழைய அனுமதிக்காததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதன் முற்றி அவர்களை பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது விடுதியின் மேலாளரும், பாதுகாவலர்கள் 2 பேரும் சேர்ந்து அந்த பெண்ணின் ஆடையை கிழித்தி மானபங்கப்படுத்தி, பாலியல் ரீதியில் தகாத முறையில் நடந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தாக்கப்பட்ட பெண் மனநல ரீதியாக பாதிப்புக்குள்ளான நிலையில் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…