Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

நடந்த கொடூர கொலையில்...கைதான காதலன் வாக்குமூலத்தால்...உச்சகட்ட பரபரப்பு!

Priyanka Hochumin September 23, 2022 & 11:20 [IST]
நடந்த கொடூர கொலையில்...கைதான காதலன் வாக்குமூலத்தால்...உச்சகட்ட பரபரப்பு! 	Representative Image.

தமிழகத்தில் நடந்த மிக கொடூர கொலை சம்பவத்தில் கைதான இளைஞர் வெளியிட்ட வாக்கு மூலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி தன்னுடைய சொந்த வீட்டில்  கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவல்துறை விசாரணையின் போது திலகவாதியின் காதலன் ஆகாஷ், சண்டையின் போது கத்தியால் குத்திவிட்டதாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆகாஷை கைது செய்து விசாரித்த போது அவர் அளித்த வாக்கு மூலமும் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் போராட்டங்கள் நடந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தனர்.

இருப்பினும் தன்னுடைய மகன் எப்படி செய்திருக்க வாய்ப்பில்லை எனவும், திலகவாதியின் குடும்பத்தினர் ஆணவக்கொலை செய்திருக்கலாம் எனவும் ஆகாஷின் தந்தை அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து வழக்கானது கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. எனவே, சமீபத்தில் இந்த கொலையை ஆகாஷ் செய்யவில்லை என்று அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. ஏனெனில் இந்த கொலையை ஆகாஷ் செய்யவில்லை என்பதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன.

திலகவதி மற்றும் ஆகாஷின் உரையாடல்கள், மெசேஜ் என்று அனைத்தையும் வைத்து பார்க்கும் போது அவர்கள் உண்மையிலேயே காதலர்கள் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகாஷை குறுக்கு விசாரணை செய்யும் பொழுது, இந்த கொலையை நான் தான் செய்தேன் என்று போலீசார் தன்னை மிரட்டி  ஒப்புக்கொண்ட வைத்ததாக ஆகாஷ் தெரிவித்தார். அதே போல் ஆகாஷ் குத்தியதாக சொல்லப்படும் கத்தியும் திலகவதி உடலில் ஏற்பட்ட காயமும் ஒத்து போகவில்லை என்று பிரேதபரிசோதனையில் கண்டறியப்பட்டது.

அப்படி என்றால் திலகவாதியை யார் கொலை செய்திருப்பார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் விசாரணை தீவிரமடைந்தது. மேலும் இந்த கொலை விசாரணையில் திலகவதி தரைபோல் யாரையும் காவல்துறை ஒழுங்காக விசாரிக்க என்று ஆகாஷ் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது தற்போது நிரூபிக்கபட்டதால் இது வேற பகுதியைச் சேர்ந்த நபரை காதலித்தலால் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்று விசாரணை வேறொரு கோணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்