புதுச்சேரி பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கைப்பையை முதியவர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் தனது மனைவி, மகளுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்வதற்காக புதுச்சேரி சென்றுள்ளார்.
இந்நிலையில், விடியற்காலை மருத்துவமனைக்கு செல்ல பேருந்து இல்லாததால் குடும்பத்துடன் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் உறங்கியுள்ளார். இதனையடுத்து, அருகில் வந்து அமர்ந்த முதியவர் ஒருவர் நிஜாமுதீன் மணைவின் கைப்பையை திருடி கட்டைப்பைக்குள் போட்டு எடுத்துச் சென்றுள்ளார்.
மேலும், இது தொடர்பாக சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…