Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கத்தியைக் காட்டி மிரட்டி இளம் பெண் பாலியல் வன்கொடுமை; “சிக்கிய 2 இளைஞர்கள்”... காஞ்சிபுரத்தில் நடந்தது என்ன? 

KANIMOZHI Updated:
கத்தியைக் காட்டி மிரட்டி இளம் பெண் பாலியல் வன்கொடுமை; “சிக்கிய 2 இளைஞர்கள்”... காஞ்சிபுரத்தில் நடந்தது என்ன? Representative Image.

ஸ்ரீபெரும்புதூரில் கத்தியைக் காட்டி மிரட்டி இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். 

கத்தியைக் காட்டி பலாத்காரம்: 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வல்லம், வடகால் ஆகிய பகுதிகளில் ஐந்து தொழில் பூங்காக்கள் உள்ளன. இந்த தொழில் பூங்காக்களில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என லட்சக்கணக்கான பேர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

 

கத்தியைக் காட்டி மிரட்டி இளம் பெண் பாலியல் வன்கொடுமை; “சிக்கிய 2 இளைஞர்கள்”... காஞ்சிபுரத்தில் நடந்தது என்ன? Representative Image

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த இளம் பெண் ஒருவரை அடையாளம் தெரியாத இரு நபர்கள் கத்தியைக் காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பெண் காவலன் செயலி மூலம் புகார் அளித்ததை அடுத்து, இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கத்தியைக் காட்டி பலாத்காரம்: 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வல்லம், வடகால் ஆகிய பகுதிகளில் ஐந்து தொழில் பூங்காக்கள் உள்ளன. இந்த தொழில் பூங்காக்களில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என லட்சக்கணக்கான பேர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

கத்தியைக் காட்டி மிரட்டி இளம் பெண் பாலியல் வன்கொடுமை; “சிக்கிய 2 இளைஞர்கள்”... காஞ்சிபுரத்தில் நடந்தது என்ன? Representative Image

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த இளம் பெண் ஒருவரை அடையாளம் தெரியாத இரு நபர்கள் கத்தியைக் காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பெண் காவலன் செயலி மூலம் புகார் அளித்ததை அடுத்து, இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

காவலன் செயலி மூலம் புகார்: 

ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் பெண் ஒருவர், காவலன் செயலி மூலமாக புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

கத்தியைக் காட்டி மிரட்டி இளம் பெண் பாலியல் வன்கொடுமை; “சிக்கிய 2 இளைஞர்கள்”... காஞ்சிபுரத்தில் நடந்தது என்ன? Representative Image

அதில், இரு தினங்களுக்கு முன்பு தனது காதலனுடன் சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, இரண்டு நபர்கள் கத்தியைக் காட்டி அழைத்துச் சென்றதாகவும், வடமங்கலம் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பிறகு இருவரும் தன்னை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் தனது புகாரில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

களமிறங்கிய காவல்துறை: 

முதற்கட்டமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக இளம் பெண் கூறும் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு நடத்தினர். 

கத்தியைக் காட்டி மிரட்டி இளம் பெண் பாலியல் வன்கொடுமை; “சிக்கிய 2 இளைஞர்கள்”... காஞ்சிபுரத்தில் நடந்தது என்ன? Representative Image

பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வடமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் புகார் குறித்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் உட்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்