ஜார்கண்ட்:
ஜார்கண்ட் மாநிலத்தில் தும்கா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 15 வயது சிறுமி ஒருவரின் லவ் புரபோசலை நிராகரித்தற்காக தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் இன்னும் மறைவதற்குள், தற்போது அதே பகுதியில் மற்றொரு பெண் (வயது 22) தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
இக்கொடூர சம்பவ குறித்து போலீஸார் நடத்திய விசாரனையில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து அந்த பெண் எரிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் தும்பா மாவட்ட போலீஸார் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
இது குறித்த போலீஸார் கூறுகையில், "குற்றவாளியான இளைஞன் ஏற்கனவே எரிக்கப்பட்ட பெண்ணிற்கு தெரிந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். ஆனால், இதற்கு பெண்ணின் பெற்றோர் மறுத்துள்ளனர். இந்த நிலையில் தான் தன்னை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை தீ வைத்து எரித்துள்ளார்' என்று தெரிவித்தனர்.
அடுத்ததடுத்து பெண்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…