சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த கிஷோர் என்ற 19 வயது இளைஞர் அப்பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்பெண்ணுடன் சண்டை ஏற்பட்டதால் கிஷோருடன் பேசுவதை அவர் நிறுத்திவிட்டுள்ளார்.
இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த கிஷோர் கஞ்சா போதையில் குரோம்பேட்டையில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறியுள்ளார். இதனால் உடனடியாக மின்கோபுரம் வழியாக செல்லும் மின் சப்ளை நிறுத்தப்பட்டது. சம்பவ இடம் விரைந்த போலீஸார் கிஷோரிடம் பேசி கீழே இறக்க பார்த்துள்ளனர். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வேன் என அடம்பிடித்துள்ளார்.
இதனையடுத்து, கிஷோரின் காதலியை அழைத்து வந்த காவலர்கள் அவர் மூலமாக இளைஞரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்துள்ளனர். பின்னர் அந்த இளைஞரை கைது செய்தனர்.
மேலும், இச்சம்பவத்தால் மின்கோபுரம் வழியாக மின் சப்ளை நிறுத்தப்பட்டது. அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…