Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆடி மாசத்துல பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? ஆடியில் குழந்தை பெறலாமா?

Nandhinipriya Ganeshan July 20, 2022 & 19:00 [IST]
ஆடி மாசத்துல பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? ஆடியில் குழந்தை பெறலாமா?Representative Image.

ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டி படைக்கும் என்பது உண்மையா? ஒருவேளை ஆடியில் பிறந்தால் எப்படி இருப்பார்கள்? என்பதை பற்றி தான் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கப்போகிறோம். பொதுவாக ஆடி மாதத்தில் பிறந்த குழந்தை என்று சொன்னாலே எல்லோரும் பயப்படுவார்கள். என்னாது ஆடியில பொறந்த குழந்தையா? ஐயோ அப்பா எப்படி தாங்குவிங்க? என்று சொல்லி சொல்லியே பலரும் இந்த மாதம் வேண்டாம் அதற்கு முன்னாடியே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளிய எடுத்துவிடலாமா? என்ற ஒரு பெரிய கேள்விக்கு கொண்டு போய்விடுகிறது இந்த ஆடி மாதம்.

ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் என்ன ஆகும்?

அப்படி என்னதாங்க இந்த ஆடி மாதத்தில் இருக்கு? எதற்காக இப்படி சொல்லிருப்பார்கள் என்று கேட்கிறீர்களா? வேற ஒன்றும் இல்லை. ஜோதிட ரீதியாக யோசித்து பார்த்தீர்கள் என்றால் கடக ராசியிலே சூரியன் சஞ்சரிக்கின்ற மாதம். சூரியன் என்கின்றவர் தகப்பனுக்கு சமமானவர். அவர் கடகத்தில் இருந்தால் ஆகாத சூழலெல்லாம் உருவாகும் என்று ஜோதிடத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது என்று ஒரு புரலையை கிளப்பி இதையை தான் காலம் காலமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர் நம் மக்கள்.

உண்மையில், எந்த மாதத்தில் பிறந்த குழந்தையாலும் எந்த பிரச்சனையும் நமக்கு ஏற்படாது. அதை முதலில் தெளிவாக உறுதியாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு ஏன் ஆடியில் பிறந்தால் ஆட்டிப்படைக்கும் என்று சொல்கிறார்கள் என்று நீங்க கேட்கலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக ஆடியில் பிறந்த குழந்தைகள் ரொம்ப ரொம்ப சுட்டித்தனமாக இருப்பார்கள். நம் வீட்டில் ஒரு குழந்தை எப்போதும் குறும்பு செய்துக்கொண்டே இருந்தால் நமக்கு கோபம் வரும் அல்லவா? அதேதான் அவர்களின் சுட்டித்தனத்தால் பல பிரச்சனைகளை கொண்டுவந்து பெற்றோர்களுக்கு மனகஷ்டத்தை கொடுப்பார்கள். இதுதாங்க ஆட்டிப்படைப்பதே தவற, வாழ்க்கையில் நிகழும் பல ஏற்றத்தாழ்வுகளுக்கு அவர்கள் காரணம் கிடையாது.

இவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும்?

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். எதையும் சட்டென்று முடிவு செய்துவிடுவது போல தோன்றும், ஆனால் அவர் ஆழ்ந்து சிந்தித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று பின்னாளில் தான் தெரியவரும். அதுமட்டுமல்லாமல், கற்பனை வலம் மிக்கவர்களாவும் இருப்பார்கள். இவர்களை யாராவது கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டால் அதை மனதில் எப்போதும் வைத்துக்கொண்டு, அவர்களின் மீது வெறுப்புணர்வுடன் இருப்பார்கள். அதேசமயம், யாரையாவது இவர்களுக்கு பிடித்துவிட்டால் அவர்களிடம் எளிதில் பழகிவிடுவார்கள். இவர்கள் எதையாவது செய்து முடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி களத்தில் இறங்கி விட்டால் நிச்சயம் வெற்றியை பெற்றுவிடுவார்கள். வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் தாங்கிக்கொள்ளும் குணம் கொண்டவர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்