குழந்தை என்றாலே மிகுந்த ஆவல் தான். அதிலும் சிலர் இரட்டைக் குழந்தை மீது அதிக ஆர்வம் கொண்டு இருப்பர். அவ்வாறே சர்வதேச அளவில், இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இரட்டைக் குழந்தைகளை இயற்கையாகவே கருத்தரிப்பது எப்படி என தேடலும் நடந்து கொண்டு தான் வருகிறது. இதற்கு இயற்கையாக ஏதேனும் சாப்பிடலாமா.? அல்லது வேறு எந்த வழிகளில் இரட்டைக் குழந்தை பிறப்பை உருவாக்க முடியும் என்பது குறித்து இதில் காணலாம்.
பொதுவாக, இரட்டைக் குழந்தைகள் அறிவியல் ரீதியாக இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்.
உருவ வேறுபாடுடைய குழந்தைகள் (Fraternal Twins)
இதில், இரட்டைக் குழந்தைகள் உருவத்தில் வேறுபாட்டுடன் காணப்படுவார்கள்.
உருவ ஒற்றுமையுடைய குழந்தைகள் (Identical Twins)
இந்த வகை உருவ ஒற்றுமையுடைய குழந்தைகள் வகையில், குழந்தைகள் ஒத்த உருவத்தில் காணப்படுவர்.
இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுக்கக் குறிப்பிட்ட சில வழிகள் உள்ளன. இந்த வழிகள், ஆய்வுகளில் நிரூபிக்கப்படாவிட்டாலும், சில தம்பதியர்கள் இந்த முறையைப் பின்பற்றி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். அதே சமயம், இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுக்க மருத்துவரின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்வதும் அவசியம் ஆகும்.
தம்பதியர்கள், இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க சில வழிமுறைகளைப் பின்பற்றி கையாள வேண்டும்.
செயற்கை முறையில் கருத்தரித்தல்
ஐவிஎஃப் எனப்படக்கூடிய செயற்கை கருத்தரித்தல் முறையில், இரட்டைக் குழந்தைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் இயல்பாக அமைகிறது. ஒன்றிற்கும் அதிகமான கருமுட்டைகள் உருவாகும் நேரத்தில், கருப்பையில் இரட்டையர் உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் IVF முறையின் மூலமாக, 3 அல்லது 4 குழந்தைகளைப் பெற்றெடுப்பர்.
அதிக வயது
பெண்கள் அதிக வயதாகும் சமயத்தில், இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. மெனோபாஸ் நிலை அதாவது வெளிப்புற மற்றும் மருத்துவக் காரணங்கள் இல்லாமல் தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் நின்று போவதாகும். பொதுவாக, 45 வயது முதல் 55 வயதில், பெண்களுக்கு மாதவிடாய் நின்று போதல் ஏற்படுகிறது. அதன் படி, இந்த மெனோபாஸ் நிலைக்கு முன்னதாக இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. 35 வயதில், குழந்தை பெற முயற்சிக்கும் பெண்களுக்கு இரட்டையர்கள் பிறப்பதற்கு அதிக சாத்தியம் உள்ளது.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம்
முதல் குழந்தை பிறந்து, இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் பெண்கள், முதல் குழந்தைக்கு அதிக அளவில் தாய்ப்பால் தர வேண்டும். இவ்வாறு, தாய்ப்பால் தந்தால் இரண்டாவது குழந்தை இரட்டைக் குழந்தைகளாப் பிறக்க வாய்ப்புள்ளது.
கருத்தடை மருந்து உபயோகிப்பது
கருத்தடை சாதனம் அல்லது கருத்தடை மருந்துகளை ஒரு சிலர் எடுத்துக் கொள்வர். அந்த நேரங்களில், உடனே நிறுத்தியதும், கருவுற முயற்சிப்பவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஏனெனில் நீண்ட காலமாக கருத்தடை மாத்திரை எடுத்தவர்கள், உடனே மாத்திரைகளை நிறுத்தும் போது கருமுட்டையானது அதிக அளவில் உருவாகும். இந்த தருணங்களில், தம்பதிகள் இரட்டைக் குழந்தைகள் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இயற்கை முறையில் இரட்டைக்குழந்தை
மேற்கூறிய முறைகளைத் தவிர, இயற்கையாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவானது இரட்டையர் பிறப்பை உறுதிபடுத்துகிறது. அந்த வகையில், சர்க்கரைவள்ளி, மரவள்ளி கிழங்கு போன்றவை சாப்பிட்டால் இரட்டையர்கள் பிறப்பர். அதே போல, இரும்புச்சத்து, ஜிங்க், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ள உணவுப் பொருளான பாதாம், பேரீட்சை, மற்றும் ஆரஞ்சு போன்றவற்றையும் சாப்பிடலாம்.
மேலும், இது போன்ற இரட்டையர்களைப் பெற்றெடுத்தலில் சந்தேகம் இருப்பினும், மருத்துவரை நாடுவது பலனைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…