பெண்களின் முகம் ஆழகாக தெரிய அவர்கள் பல முறையை பயன்படுத்துவார்கள். அதில் ஒரு முறை தான் பியூட்டி பார்லர், அங்கு சென்றாலே முகம் அழகாக மாறும், அதே சமயம் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் பல விதமான ரசாயனப் பொருட்கள் இருக்கும். அது நம் சருமத்திற்கும், முகத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எந்த வித தீங்கும் விளைவிக்காமல் முகம் பொழிவாக இருக்க பயன்படுத்தும் பொருட்களை பற்றி இப்பகுதியில் காண்போம்.
இந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள சுருக்கம், பருக்கள், கரும்புள்ளிகள் ஆகிய பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்தலாம்.
முகம் ஜொலிக்க தேவையானப் பொருட்கள்
முள்ளங்கி - 1/2
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு சந்தனப் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1/2
செய்முறை
Step 1
முதலில் 1/2 முள்ளங்கி, 1/2 உருளைக்கிழங்கை நன்கு கழுவி அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.
Step 2
தோல் நீக்கிய முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
Step 3
நறுக்கிய துண்டுகளை மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
Step 4
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்துக் கொள்ளவும்.
Step 5
தயிரை சேர்த்தப் பிறகு, 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனப் பவுடரை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
Step 6
இப்பொது இந்த ஃபேஷ் பேக் தயார். இதனை முகத்தில் தடவி கொள்ளவும்.
Step 7
முகத்தில் தடவி 5-10 நிமிடங்களுக்கு பிறகு, குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரம் ஒரு முறை பயன்படுத்தி உங்கள் முகத்தை ஜொலிக்கவையுங்கள்.
இதுபோன்ற அழகுக் குறிப்புகள், உணவு மற்றும் உடல் நலம் உள்ளிட்ட மேலும் பல லைஃப் ஸ்டைல்களை பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது search around web பேஸ்புக் பக்கத்தை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…