தேவையான பொருட்கள்:
➦ பால் - 2 கப்
➦ அரிசி - 1/2 கப்
➦ ரோஸ் வாட்டர் - 3 சொட்டு
➦ சர்க்கரை - 1/4 கப்
➦ ஏலக்காய் தூள் - சிறிதளவு
➦ உலர்ந்த ரோஜா இதழ்கள் - சிறிதளவு
➦ நறுக்கிய பாதாம் பருப்பு - சிறிதளவு
➦ நறுக்கிய முந்திரி - சிறிதளவு
➦ உலர் திராட்சை - சிறிதளவு
ரோஸ் கீர் ரெசிபி செய்முறை:
➦ முதலில் அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர், ஒரு அடிகடிமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
➦ இப்போது அரிசியை நன்றாக கழுவி கொதிக்கும் பாலில் சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் அரிசி பாலில் குழையும் வரை வேக விடவும்.
➦ அரிசி பாதிக்குமேல் வெந்ததும் உலர்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்துக்கொள்ளவும். அரிசி முழுவதுமாக வெந்த பிறகு அதில் பொடியாக்கிய சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
➦ ரொம்ப நேரம் அவ்வளவு தான் இப்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். அதை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதன் மீது நறுக்கிய பாதாம், முந்திரி, மற்றும் திராட்சையை தூவி விடவும்.
➦ தித்திப்பான ரோஸ் கீர் தயார். சுடாகவும் பரிமாறலாம் அல்லது ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…