நம் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் நம்மோடு தொடர்ந்து இருக்கும் ஒரு உன்னதமான உறவு தான் நட்பு. வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, வெறும் அன்பை மட்டும் வைத்து உருவான இந்த உறவை மேலும் அழகாக்க அழகான நட்பு கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1 | தகுதியும் தராதரமும் பார்த்து வராத உறவு நட்பு மட்டும்தான். நட்பிற்கு தகுதியும் தராதரமும் பார்ப்பவர் எல்லாம் நட்புக்கு தகுதியற்றவர்கள் என்பது பொருளாகும்.
2 | நண்பர்களை கவனமாக தேர்ந்தெடு. உனது வாழ்க்கையையே மாற்றும் உன்னதனமான உறவு அது.
3 | நாம் சந்தோஷமாக இருந்தால் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் சோகமாக இருந்தால் அது நம் நண்பனுக்கு மட்டும் தான் புரியும்.
4 | 'கவிதை' என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து. 'காதல்' என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து. நட்பு மட்டுமே மருந்தாகவும்..விருந்தாகவும் இனிக்கும் கரும்பு..!
5 | உரிமை கொள்ள ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளதைப் புரிந்து கொள்ள நண்பா உன் ஒரு உறவுபோதுமடா..
6 | நமக்குள் இருக்கும் திறமைகளை, ரகசியங்களையும் யாரால் கொண்டு வர முடிகிறதோ இல்லையோ நம் நண்பர்களால் கண்டிப்பாக கொண்டு வர முடியும்.
7 | அன்னையின் அன்பும், தந்தையின் கண்டிப்புக்களும் ஒன்றாக அமைந்த ஒரு உறவே நட்பின் பொது அடையாளம். அனைத்தும் பொருந்திய உன்னத நட்பு..!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…