காதல் என்பது ஒரு அழகான உணர்வு. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்த காதல் எப்படி மலருகிறது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், ஒருவருக்குள் இந்த காதல் வந்துவிட்டால், வாழ்க்கையில் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடேது. அதே சமயம், எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியுமோ, அதே அளவிற்கு வலியையும் இந்த காதலால் மட்டுமே கொடுக்க முடியும். அத்தகைய வலிகளை கவிதைகளாக இந்த பதிவில் கொடுத்துள்ளோம்.
1 | உடலுக்கு உயிர் கூட சுமைதான் நாம் உயிராக நினைக்கும் ஓர் உயிர் நம்மை மறந்து போகும் போது..
2 | அனைவரும் அருகில் இருந்தும் அனாதைபோல் உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு!
3 | அன்பு ஒருபோதும் தோற்பதில்லை அதிகமாக அன்பு வைத்தவர்கள் தான் தோற்கடிக்கப்படுகிறார்..
4 | போகும்போதே நீயே என்னைக் கொன்று போயிருக்கலாம் உன் நினைவுகள் இப்பொழுது என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொள்வதைக் காட்டிலும்..
5 | நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம் நாளை யாரோவாக உணரப்படுவோம் என்று அறிந்த நொடி அமைதியாக விலகிவிடுவது நல்லது...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…