Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி.. இந்தியாவின் தங்க மங்கைக்கு தடை விதிப்பு!!

Sekar Updated:
ஊக்கமருந்து சோதனையில் தோல்வி.. இந்தியாவின் தங்க மங்கைக்கு தடை விதிப்பு!!Representative Image.

இரண்டு முறை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள கே சஞ்சிதா சானு, ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்த நிலையில், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் (NADA) தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊக்கமருந்து குற்றச்சாட்டை எதிர்கொண்ட சானு அப்போது விடுவிக்கப்பட்டார். ஆனால் சமீபத்திய தடை பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்ட பிறகு அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் 49 கிலோ எடையில் சானு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும் அவர் டிரோஸ்டனோலோன் மெட்டாபொலைட், அனபோலிக் ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டது சோதனையில் தெரிய வந்தது.

இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் சஹ்தேவ் யாதவ் கூறுகையில், "இது போன்ற ஒரு சிறந்த வீரர் நேர்மறை சோதனை செய்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இது இளைஞர்கள் மீது மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார்.

சானு மட்டும் குற்றச்சாட்டை எதிர்கொள்ளவில்லை. அவருடன் வீர்ஜீத் கவுர், பூரணி ஸ்ரீ மற்றும் ஆஷிஷ் ஆகியோரும் இந்த தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை