தற்போதைய PSG உடனான அர்ஜென்டினா கேப்டனின் ஒப்பந்தம் ஜூன் 30 அன்று முடிவடைகிறது. ஆனால் லா லிகா அணி இன்னும் அதிகாரப்பூர்வ வாய்ப்பை வழங்காததால், பார்சிலோனாவுக்குத் திரும்பும் லியோனல் மெஸ்ஸியின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
மெஸ்ஸி மீண்டும் ஸ்பெயினுக்கு திரும்ப வருவது குறித்து பார்சிலோனா ஒரு உள் பொருளாதார அறிக்கையை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் மெஸ்ஸியின் ஆண்டு வருமானம் 230 மில்லியன் யூரோக்கள், அதில் 150 மில்லியன் யூரோக்கள் புதிய ஸ்பான்சர்களிடமிருந்து வரும் என்றும், 80 மில்லியன் யூரோக்கள் டிக்கெட் விற்பனையிலிருந்து வரும் என்றும் அறிக்கை வெளிப்படுத்தியது. மேலும் கேம்ப் நௌ மைதானம் தற்போது புதுப்பிக்கப்படுவதால், கிளப் அடுத்த சீசனில் மான்ட்ஜுயிக் ஸ்டேடியத்தையும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மெஸ்ஸியின் வருகை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று நம்பப்படுகிறது. கடந்த சீசனில் மெஸ்ஸி ஸ்பான்சர்ஷிப்பில் 13 சதவீதமும், சட்டை விற்பனையில் 60 சதவீதமும் வளர்ந்துள்ளார். இது PSG-க்கு நிறைய வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது. லா லிகாவிற்கு மெஸ்ஸியின் வருகையை உறுதிப்படுத்துமாறு பார்சிலோனா அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. ஆனால் கிளப் இன்னும் அதற்கு பதில் அறிக்கையை வெளியிடாமல் தாமதம் படுத்துகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…